வலைப்பதிவு விவரங்கள்

தலைமுறைகளைத் தாண்டி தமிழ் வாழ்ந்திட, அமெரிக்கத் தமிழ் மாநாட்டில் ஓர் ஆயத்தப்பணி

பின் செல்ல
IMG

‘தலைமுறை தாண்டியும் தமிழ்’ என்ற மையக்கருவில் ஒருங்கிணைக்கப்பட்ட இம்மாநாடு வழக்கமான இலக்கிய மாநாடுகளில் இருந்து சிறப்பான வேறுபாடுகள் சிலவற்றைக் கொண்டிருந்தது.

அதன் ஓர் அங்கமாக அமைந்தது அண்மையில் (ஜூலை 1- 4, 2022) அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயின்ட்ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஃபெட்னா (FeTNA) என்னும் வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை மாநாடு அமைந்தது. நியூயார்க் தமிழ்ச்சங்கமும் இணைந்து இம்மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்துள்ளன. இம்மாநாட்டில் நாமும் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றோம்.

‘தலைமுறை தாண்டியும் தமிழ்’ என்ற மையக்கருவில் ஒருங்கிணைக்கப்பட்ட இம்மாநாடு வழக்கமான இலக்கிய மாநாடுகளில் இருந்து சிறப்பான வேறுபாடுகள் சிலவற்றைக் கொண்டிருந்தது.

ஃபெட்னாவின் முன்னாள் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி, மாநாட்டில் தேர்வான புதிய தலைவர் பாலா சுவாமிநாதன், கதிர்வேல் குமாரராஜா, காஞ்சனபூலா எனப் பெரும் ஆளுமைகளோடு, நெல்லை கீர்த்தி ஜெயராஜ், ஆரூர் பாஸ்கர், ஈரோடு பிரபு உள்ளிட்ட இளைய தலைமுறை ஆளுமைகளும் கரங்கோத்துக் களமிறங்கியது மாநாட்டின் நோக்கத்தை வெற்றித் திசையில் விரைவுபடுத்தியிருந்தது.

முதல்நாளான ஜூலை 1, 2022 அன்று அமெரிக்க மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி தொழில் முனைவோர்களின் அமர்வு நடைபெற்றது. அன்றைய தினம் ஒருங்கிணைந்த தமிழ்த் தொழில் முனைவோர் சார்ந்துள்ள நிறுவனங்களின் மொத்த மதிப்பு 50 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்றார் ஃபெட்னாவின் புதிய தலைவர் பாலா சுவாமிநாதன்.

இவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பரப்புரைக் குழுவில் முக்கிய முகமாக இருந்து தற்போதும் அதிபருக்கு அணுக்கமானவராக இருப்பது தமிழ் மக்களுக்கு ஒரு பெருமையே.

‘டெஃப்கான்’ என்ற தொழில் முனைவோர் அமர்வில் அமெரிக்காவின் பல நகரங்கள், கனடா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர். இவ்வரங்கில் நடிகர் நெப்போலியன், அமைச்சர் நேருவின் உதவியாளராக வாழ்வைத் தொடங்கி, திரைநட்சத்திரமாகி, தற்போது அமெரிக்காவில் 300 ஏக்கரில் விவசாயம் செய்து வருவது வரையிலான அனுபவத் தொகுப்பை இனிமையாக எடுத்துரைத்தார்.